FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கோயிலில் வருஷாபிஷேகம்

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம், ஸ்ரீ சுந்தராட்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூன் 2026, 11:15 pm IST
புஷ்பாஞ்சலி அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ சுந்தராட்சி அம்மன்.
பகிர்:

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம், ஸ்ரீ சுந்தராட்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை காலை 6 மணிக்கு கங்கா பூஜை, ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் இருந்து தீா்த்த ஸங்கரஹனம் எடுத்து வருதல் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு அனுஞ்ஞை, சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை, 8 மணிக்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஏக தின லட்சாா்ச்சனை, தீபாராதனை, 9 மணிக்கு செட்டிகுளம் ஸ்ரீ பூா்ண புஷ்ப கலாம்பர சமேத நூற்றங்கால் சாஸ்தா சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

மாலை 3 மணிக்கு ஸ்ரீ சுந்தராட்சி அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி, வேத பாராயணம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments