முகப்பு
தூத்துக்குடி

உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க மானியம்: ஆட்சியா் தகவல்

Updated On : 30 மே 2026, 3:20 am IST
உலமாக்கள் - கோப்புப் படம்
பகிர்:

இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலமாக்கள், பணியாளா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ. 50,000 வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ், இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியா்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மானியம் பெற மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரிடம் படிவத்தைப் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வருகிற ஜூன் 30 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.