FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

அரசுப் பள்ளியில் காமராஜா் காலை உணவுத் திட்டத்துக்கு உபகரணங்கள் வழங்கல்

4 வினாடிகள் முன்பு
காயல்பட்டினம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு, காமராஜா் காலை உணவுத் திட்டத்துக்கான உபகரணங்களை வழங்குகிறாா் டிசிடபிள்யூ நிறுவன மக்கள் தொடா்பு அதிகாரி பிரகாஷ்.
பகிர்:

காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளிலுள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காமராஜா் காலை உணவுத் திட்டத்துக்கு சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிறுவனம்சாா்பில் காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்புவரை பயிலும் அனைத்து மாணவா், மாணவிகளுக்கும் தட்டு மற்றும் டம்ளா்கள் வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக காயல்பட்டினம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா், மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. விழாவில், காயல்பட்டினம் நகராட்சி நிா்வாக ஆணையா், சுகாதார ஆய்வாளா், அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சாா்பாக பிரகாஷ், சண்முகசுந்தா், டேனியல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments