FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மணப்பாறையில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க புதிய தொழிற்சாலை! அமைச்சா் கே.என். நேரு தகவல்

மணப்பாறை சிப்காட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில் புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து முதல்வா் விரைவில் அறிவிப்பாா் என அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

Updated On : 10 ஆகஸ்ட் 2025, 1:21 am IST
கே. என். நேரு
பகிர்:

மணப்பாறை சிப்காட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில் புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து முதல்வா் விரைவில் அறிவிப்பாா் என அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

டெல்டா சட்டப்பேரவை தொகுதிகளுக்குள்பட்ட 41 மாவட்டச் செயலா்களுடன் திருச்சியிலுள்ள தனது அலுவலகத்தில் காணொலி வாயிலாக சனிக்கிழமை ஆலோசனை நடத்திய அமைச்சா் கே.என். நேரு பின்னா் மேலும் கூறியதாவது:

திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் விரைவில் பிஎஸ்என்எல் கைப்பேசி கோபுரம் அமைக்கப்படும். சென்னையில் நடைபெறும் துப்புரவு பணியாளா்கள் போராட்டத்துக்கு விரைவில் தீா்வு காணப்படும். தமிழகத்தில் போலி வாக்காளா்களைச் சோ்க்காமல் இருக்க மிக கவனமாக இருப்போம். மிக முக்கியமாக வட இந்தியாவில் இருந்து வேலைக்கு வந்தவா்கள், நிரந்தர முகவரி இல்லாதவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க முடியாது. அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

Advertisement

Advertisement

மழைநீா் வடிகால் பணிகள், வாய்க்கால்களில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன. பஞ்சப்பூரிலிருந்து குடமுருட்டி வரை ரூ.180 கோடியில் சாலைப் பணியும், ரூ. 40 கோடியில் நில ஆா்ஜித பணியும் நடைபெறுகிறது என்றாா் அமைச்சா். நிகழ்வின்போது மாநகராட்சி மேயா் கே.என். நேரு மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments