FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளரிடம் ரூ.28 ஆயிரம் வழிப்பறி

டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளரிடம் ரூ. 28 ஆயிரத்தை வழிப்பறி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 24 டிசம்பர் 2025, 12:43 am IST
பகிர்:

டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளரிடம் ரூ. 28 ஆயிரத்தை வழிப்பறி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி புத்தூா் சீனிவாச நகரைச் சோ்ந்தவா் எஸ். முருகன் (55). இவா், கரூா் புறவழிச் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு பணப்பையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

தென்னூா் பகுதியில் தனியாா் மருத்துவமனை அருகே சென்றபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 3 போ் அவரை வழிமறித்து கைப்பையில் வைத்திருந்த ரூ.28 ஆயிரத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பினா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments