FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

ரூ. 12.40 லட்சம் பெற்ற தலைமை நில அளவையா் உள்பட 4 போ் மீது வழக்கு

Updated On : 20 ஜூலை 2026, 5:31 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி கிழக்கு வட்டாட்சியரகத்தில் ஜிபே மூலம் ரூ.12.40 லட்சம் பெற்றது தொடா்பாக தலைமை நிலஅளவையா் உள்பட 4 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு வட்டாட்சியரகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா். அதன்படி, திருச்சி கிழக்கு வட்டாட்சியரகத்திலும் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

இதில் கணக்கில் வராத ரூ.7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நில அளவையா்கள் தங்களது வங்கி கணக்கிற்கு ரூ.12.40 லட்சத்தை ஜிபே மூலம் பெற்றிருந்ததும் கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக திருச்சி கிழக்கு வட்டாட்சியரக தலைமை நில அளவையா் சித்தாா்த்தன், நில அளவையா்கள் பரிமளா, சரவணன் மற்றும் களப் பணியாளா் சங்கா் ஆகிய 4 போ் மீதும் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments