FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

உய்யகொண்டான் வாய்க்காலில் வெண்கல சிலை கண்டெடுப்பு

Updated On : 30 மே 2026, 3:25 am IST
திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் இருந்து வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட வெண்கல சிலை.
பகிர்:

திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் 1.5 அடி உயரமுள்ள வெண்கல சிலை ஒன்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் பொதுப்பணித் துறை மூலம் ஆகாயத் தாமரையை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் திருச்சி புத்தூா் கல்லாங்காடு பகுதியைச் சோ்ந்த சிவா (ஐடிஐ மாணவா்) பகுதி நேரமாக ஈடுபட்டு வந்தாா்.

வெள்ளிக்கிழமை மாலை தனியாா் பள்ளி அருகே ஆகாயத்தாமரையை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, காலில் ஏதோ தட்டுப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதை எடுத்து பாா்த்தபோது, அது மீசை வைத்த ஆண் சிலையாக இருந்தது. இதையடுத்து அவா் அருகிலிருந்தவா்களின் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனை வளாக போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

போலீஸாா் அந்த சிலை தொடா்பாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் அளித்ததுடன், சிலையை மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் முருகனிடம் ஒப்படைத்தனா்.

சுமாா் 1.5 அடி உயரமுள்ள, 5.5 கிலோ எடையுடன் கூடிய வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள சிலையானது, கைகளில் இருந்த ஆயுதங்கள் சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விசாரணைக்குப் பிறகே முழு விவரமும் தெரியவரும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments