சிங்கப்பூா் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மீண்டும் தரையிறக்கம்
திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு 170 பயணிகளுடன் புறப்பட்ட ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை சிறிது நேரத்திலேயே பைலட்டுகள் கண்டறிந்தனா்.
இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தை பரிசோதித்த வல்லுநா்கள் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய நீண்ட நேரமாகும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து 170 பயணிகளும் விமான நிலையத்திலும், அருகிலுள்ள உணவக விடுதிகளிலும் தங்கவைக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்த விமானம், சிங்கப்பூருக்கு பிற்பகல் 1.30 மணிக்கு இயக்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 மணி நேரத் தாமதத்துக்குப் பின் சிங்கப்பூருக்கு விமானம் இயக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.