அரியலூரில் நாளை 4 ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
அரியலூர் வட்டம் அமீனாபாத், அன்னிமங்கலம், உடையார்பாளையம் வட்டம் பருக்கல் (மே), ஜயங்கொண்டம் செந்துறை வட்டம்
அரியலூர் வட்டம் அமீனாபாத், அன்னிமங்கலம், உடையார்பாளையம் வட்டம் பருக்கல் (மே), ஜயங்கொண்டம் செந்துறை வட்டம் இரும்புலிக்குறிச்சி, ஆண்டிமடம் வட்டம் ஆத்துக்குறிச்சி ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை (செப். 7) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும் இம்முகாம்களில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைபட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் மு. விஜயலட்சும் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.