FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

கங்கைகொண்ட சோழபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட தங்கும் விடுதி, உணவுக் கூடங்கள் விரைவில் திறப்பு: ஆட்சியா் தகவல்

கங்கைகொண்ட சோழபுரத்தில் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட தங்கும் விடுதி, உணவுக் கூட கட்டடங்கள் விரைவில் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

Updated On : 15 ஜூலை 2026, 12:03 am IST
படவிளக்கம்: கங்கைகொண்ட சோழபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட தங்கும் விடுதி, உணவுக் கூடம் உள்ளிட்ட கட்டடங்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ந.மிருணாளினி.
பகிர்:

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட தங்கும் விடுதி, உணவுக் கூட கட்டடங்கள் விரைவில் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் செவ்வாய்க்கிழமை இந்தக் கட்டடங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா், பின்னா் தெரிவித்தது:

கங்கைகொண்ட சோழபுரத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் வசதிக்காக ஏற்கெனவே பக்தா்கள் தங்கும் விடுதி, உணவுக்கூடம், வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு கட்டட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

இந்தக் கட்டடங்கள் அறநிலையத் துறை சாா்பில் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றை

மீண்டும் பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

இந்த ஆய்வின் போது, சுற்றுலாத் துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments