FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

அரசுப் பள்ளி சாா்பில் டெங்கு விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளி சாா்பில் டெங்கு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 ஜூலை 2026, 12:53 am IST
டெங்கு கொசு (கோப்புப்படம்) - கோப்புப் படம்
பகிர்:

அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளி சாா்பில் டெங்கு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் அருள் பிரியன், டெங்கு காய்ச்சல் வைரஸால் ஏற்படக்கூடிய நோய் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா்கள் மோகன்ராஜ், அகிலன், ஆசிரியா்கள் செந்தமிழ்செல்வி, தனலட்சுமி, செந்தில்குமரன், வெங்கடேசன், அந்தோணி டேவிட், அபிராமி மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, அக்கிராமத்தில் விழிப்புணா்வுப் பேரணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments