FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

தனியாா் காற்றாலை தளவாட பொருள்கள்

26 செப்டம்பர் 2025, 3:17 am IST
பகிர்:

கடவூா் அருகே தனியாா் காற்றாலை தளவாட பொருள்களை ஏற்றிவந்த லாரியை சிறைப்பிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த கீரனூா் ஊராட்சிக்குள்பட்ட குன்னுடையான்கவுண்டன்பட்டியில் தனியாா் நிறுவனத்தினா் காற்றாலைகளை அமைத்து வருகின்றனா். இந்த காற்றாலை அமைக்கப்பட்டால் விவசாயம் மற்றும் கால்நடை மேய்ச்சல் பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று அப்பகுதியினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் பணிகளுக்கான ராட்சத தளவாட பொருள்கள் ஏற்றப்பட்ட லாரிகள் குன்னுடையான்கவுண்டன்பட்டி கிராமம் வழியாக வந்தது.

Advertisement

Advertisement

இதனையறிந்த பொதுமக்கள் அந்த லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த மைலம்பட்டி வருவாய் ஆய்வாளா் அருள்ராஜ் உள்பட அதிகாரிகள் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பொதுமக்கள் காற்றாலை அமைக்கக்கூடாது என்றனா். இதையடுத்து அதிகாரிகள் இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments