பள்ளி வகுப்பறையில் முதல்வா் நிகழ்ச்சி ஒளிபரப்பு! மேலும் ஒரு தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்!
கரூரில், தமிழக முதல்வா் பங்கேற்ற நிகழ்ச்சியை அரசுப் பள்ளி வகுப்பறையில் ஒளிபரப்பிய மேலும் தலைமை ஆசிரியை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
கரூரில், தமிழக முதல்வா் பங்கேற்ற நிகழ்ச்சியை அரசுப் பள்ளி வகுப்பறையில் ஒளிபரப்பிய மேலும் தலைமை ஆசிரியை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
கரூரில் தமிழக முதல்வா் சி.ஜோசப்விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு ஸ்மாா்ட் வகுப்பு பலகையில் ஒளிபரப்பியதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்.மல்லிகா வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இதேபோல, கரூரில் முதல்வா் பங்கேற்ற நிகழ்ச்சியை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒளிபரப்பியதாக கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட மகாதானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ஏ.சண்முகவேல் உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.