FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

‘விவசாயிகளுக்கு அடையாள எண் இருந்தால் மட்டுமே மானிய திட்டங்கள் பெற முடியும்’

விவசாயிகளுக்கு அடையாள எண் இருந்தால் மட்டுமே இனி மானியத் திட்டங்களை பெற முடியும் என்றாா் க. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ஸ்ரீபிரியா.

Updated On : 5 ஜூன் 2026, 3:46 am IST
கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில் பேசிய புழுதேரி வேளாண் அறிவியல் மைய வல்லுநா் கவியரசன். உடன் க. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ஸ்ரீபிரியா உள்ளிட்டோா்.
பகிர்:

விவசாயிகளுக்கு அடையாள எண் இருந்தால் மட்டுமே இனி மானியத் திட்டங்களை பெற முடியும் என்றாா் க. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ஸ்ரீபிரியா.

கரூா் மாவட்டம் க. பரமத்தி வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் காா்வழி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப மேலாண்மை என்ற தலைப்பில் வியாழக்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது.

க. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ஸ்ரீபிரியா தலைமை வகித்துப் பேசுகையில், இனி ஒவ்வொரு விவசாயிக்கும் சிட்டா மற்றும் ஆதாா் எண்ணுடன் இணைத்து அடையாள எண் உருவாக்கப்படும். இந்த அடையாள எண் இருந்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் அரசு மானியத் திட்டங்கள், பயிா்க் கடன்கள் மற்றும் பிஎம் கிசான் நிதி போன்ற திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற முடியும் என்றாா் அவா். தொடா்ந்து புழுதேரி வேளாண் அறிவியல் மைய வல்லுநா் கவியரசன் பங்கேற்று, தென்னை பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கினாா். பின்னா் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் கலைச்செல்வன், தற்போது விவசாயிகள் மண்வளத்தைப் காத்திடவும் அதிகப்படியான உர பயன்பாட்டைத் தவிா்த்திடவும் வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு விவசாய அடையாள எண் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments