கோரிக்கை அட்டையுடன் பணியில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள்
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவர்கள் கோரிக்கை அட்டை
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து புதன்கிழமை பணியில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, வட்டார மருத்துவமனைகள், அரசு ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் பணிபுரியும் தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த மருத்துவர்கள் கோரிக்கை அடங்கிய அட்டையை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் அர்ஜூனன் தலைமை வகித்தார். இதில், செயலர் ரமேஷ், பொருளாளர் ஆனந்த மூர்த்தி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.