சின்னமுட்லு அணைக்கட்டு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
கிடப்பில் போடப்பட்டுள்ள சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
கிடப்பில் போடப்பட்டுள்ள சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வடட்ம், நெய்குப்பை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு மற்றும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வேப்பந்தட்டை ஒன்றிய செயலர் எ. முருகேசன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் மனோஜ்குமார், சி. கோவிந்தன், அண்ணாமலை, எஸ். விஜயகுமார், டி. அறிவழகன், எஸ். செங்கமலை, என். வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் எம். சின்னதுரை தமிழக அரசின் செயல்பாடு, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில், கிடப்பில் போடப்பட்டுள்ள சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை உடனடியாக தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாளந்துறை - சின்னக்கல்பூண்டி இடையில் உள்ள வெள்ளாற்றில் மேம்பாலம் அமைக்க வேண்டும். நெய்குப்பை கிரமத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மரவநத்தம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, ஒன்றியச் செயலர் எம். முருகேசன் கட்சி வளர்ச்சிக்காக ரூ. 42 ஆயிரம் வழங்கினார். இதில், மாவட்ட செயலர் ஆர். மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். அழகர்சாமி, எ. கலையரசி, எஸ். அகஸ்டின், கரும்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகி ஏ.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.