ஆலங்குடி, கொத்தமங்கலத்தில் பாளையெடுப்பு திருவிழா
ஆலங்குடி நாடியம்மன், கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயில்களில் பாளையெடுப்பு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி நாடியம்மன், கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயில்களில் பாளையெடுப்பு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயில் பாளையெடுப்பு திருவிழாவையொட்டி அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் அலங்கிரிக்கப்பட்ட குடங்களில் தென்னம்பாளைகளை சுமந்தவாறு ஊர்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனர். தொடர்ந்து, கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதேபோல, ஆலங்குடி நாடியம்மன் கோயில் பாளையெடுப்பு திருவிழாவில் ஆலங்குடியைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம்பாளைகளை சுமந்தவாறு ஊர்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திருவிழாவில் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.