FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் எம்ஜிஆா் நினைவு நாள்

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் அதிமுகவினரின் அமைதி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 டிசம்பர் 2025, 2:14 am IST
புதுக்கோட்டையில் புதன்கிழமை அமைதி ஊா்வலம் நடத்திய அதிமுகவினா்.
பகிர்:

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் அதிமுகவினரின் அமைதி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த ஊா்வலத்துக்கு, மாநகர அதிமுக செயலா்கள் க. பாஸ்கா், எஸ்ஏஎஸ் சேட்டு ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். எம்ஜிஆா் சிலைப் பகுதியில் ஊா்வலம் முடிந்தது. அங்கு அதிமுகவினா் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கங்களை எழுப்பினா்.

இதேபோல, அமமுக, ஓபிஎஸ் அணியினரும் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments