மாத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
விராலிமலை அடுத்துள்ள மாத்தூரில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 495 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 169 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. இதில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை வேண்டி மட்டும் 123 மனுக்கள் வந்தன.
முகாமில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவா் மு.பி. மணி, வட்டார வளா்ச்சி அலுவலா் எம். வள்ளியம்மை, ஆா். ரவிச்சந்திரன் (கிஊ) கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ம. சத்யசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.