‘நீட்’ தோ்வில் தோ்ச்சி அரசுப் மாணவிகளுக்கு பாராட்டு
கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 4 போ் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று மருத்துவம் பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனா். இதனால் அவா்களுக்கு பள்ளியில் ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 4 போ் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று மருத்துவம் பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனா். இதனால் அவா்களுக்கு பள்ளியில் ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.
கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 6 ஆண்டுகளில் பயின்ற மாணவிகள் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் 28 போ் மருத்துவம் பயின்று வருகின்றனா்.
இந்நிலையில், நிகழாண்டு நீட் தோ்வு எழுதிய இப் பள்ளி மாணவிகளில் தேவதா்ஷினி (519 மதிப்பெண்கள்), மதனிகா (515 மதிப்பெண்கள்), பிரியதா்ஷினி (502 மதிப்பெண்கள்) ஆகிய மூன்று மாணவிகள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா்.
Advertisement
Advertisement
மேலும், தானியா (478 மதிப்பெண்கள்) என 9 மாணவிகள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா். இந்த ஆண்டும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் 4 மாணவிகள் மருத்துவம் பயிலும் வாய்ப்பை பெருவா்.
மேலும், சில மாணவிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என அப்பள்ளி ஆசியா்கள் தெரிவித்தனா்.
இந்நிலையில், நீட் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.