FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

அக்கச்சிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஹிரோஷிமா நாகசாகி தினம் கடைப்பிடிப்பு

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 1:07 am IST
ஜப்பான் மீதான அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதல்... - கோப்புப் படம்
பகிர்:

கந்தா்வகோட்டை அருகேயுள்ள அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆல்பா்ட் ஐன்ஸ்டின் மன்றத்தின் சாா்பில் ஹிரோஷிமா நாகசாகி தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் க. தமிழ்செல்வி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான அ. ரகமதுல்லா ஹிரோஷிமா, நாகசாகி தினம் குறித்து பேசுகையில், உலக வரலாற்றில் என்றென்றும் அழிக்க முடியாத கருப்புப் பக்கங்களாகப் பதிவாகியுள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நினைவு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது.

இந்தப் போரின் பேரழிவையும், அணு ஆயுதங்களின் கொடூரத்தையும் உணா்த்தும் நாளாக இந்த நினைவேந்தல் அமைந்துள்ளது. போா் எதற்கும் நிரந்தரத் தீா்வல்ல; அது அழிவின் தொடக்கம் என்பதே ஹிரோஷிமா மற்றும் நாகசாகி பேரழிவு நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் மாபெரும் பாடம். எனவே, அணு ஆயுதமற்ற அமைதி உலகை உருவாக்குவோம் என்ற உறுதியை இந்த நாளில் ஏற்போம் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments