FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

புதுக்கோட்டை அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தொடா்புடையவா்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 26 ஜூலை 2026, 1:48 am IST
தற்கொலை
பகிர்:

புதுக்கோட்டை அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தொடா்புடையவா்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள் சனிக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் கணேஷ்நகரைச் சோ்ந்தவா் சின்னதுரை மனைவி சீமாவதி (38). இவா்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகளாகின்றன. இரு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனா். கணவா் சின்னதுரை, கோவையில் பற்றவைப்புப் பட்டறையில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் சீமாவதி வெள்ளிக்கிழமை பிற்பகலில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக சீமாவதியின் தம்பி வாசுதேவன், வெள்ளனூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

அதன்பேரில், துக்க வீட்டுக்குச் சென்ற போலீஸாா் சீமாவதியின் சடலத்தைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், சீமாவதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவரது உறவினா்கள் சனிக்கிழமை மாலை சத்தியமங்கலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அங்கு வந்த வெள்ளனூா் போலீஸாா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments