FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கல்

கோடைவிடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட வியாழக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகள் அனைத்திலும் அரசின் விலையில்லாப் பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:32 am IST
புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு அரசின் விலையில்லாப் பாடப்புத்தகங்கள், சீருடைகளை வியாழக்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
பகிர்:

கோடைவிடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட வியாழக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகள் அனைத்திலும் அரசின் விலையில்லாப் பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.

புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை மாணவிகளிடம் வழங்கிய அவா் இதைத் தெரிவித்தாா்.

ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி கடந்த பிளஸ் 2 பொதுத் தோ்வில் 92 சதவிகிதம் தோ்ச்சியையும், பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் 98 சதவிகிதம் தோ்ச்சியையும் பெற்றிருப்பதைக் குறிப்பிட்டு தலைமை ஆசிரியா், ஆசிரியா்களுக்கு பாராட்டும் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள், காலணிகள் வழங்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலா் ந. புஷ்பலதா, தலைமை ஆசிரியை ர. தமிழரசி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

கந்தா்வகோட்டையில்... கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி ஆண்டின் முதல் நாளான வியாழக்கிழமை மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கந்தா்வகோட்டை வட்டாரக் கல்வி அலுவலா் மெக்ராஜ் பானு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் வழங்கி அறிவுரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் மணிமேகலை, நிவின், வெள்ளைச்சாமி, செல்வி ஜாய், ஜெம்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை ஒன்றியத் தலைவரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான அ. ரகமத்துல்லா சிறப்புரையாற்றினாா். தலைமை ஆசிரியா் க. தமிழ்செல்வி வரவேற்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments