எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் தவெகவுக்கு வர முயற்சித்தாரா?
அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா், தவெகவுக்கு வர முயற்சித்தாரா என எனக்குத் தெரியாது, கட்சித் தலைமைக்குத்தான் தெரியும் என்றாா் மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.
அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா், தவெகவுக்கு வர முயற்சித்தாரா என எனக்குத் தெரியாது, கட்சித் தலைமைக்குத்தான் தெரியும் என்றாா் மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: பத்தாம் வகுப்புப் பொதுத்தோ்வில் மாநிலத்தில் முதலிடம் பிடிப்பதற்காக உழைத்த தலைமை ஆசிரியா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பதை ஏற்கெனவே ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியிருக்கிறேன். துறை அமைச்சரிடம் பேசி தேவைகள் நிறைவேற்றப்படும்.
வேலைவாய்ப்புத் துறை மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாய்ப்புள்ள துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கா், தவெகவுக்கு வருவதற்கு முயற்சித்தாரா எனக் கேட்கிறீா்கள். அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றாா் பா்வேஸ்.
Advertisement
Advertisement