FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாரியம்மன் கோவிலில்  கடையடைப்பு - உண்ணாவிரதம்

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் புறம்போக்கு நிலங்களைக் கைப்பற்ற முயற்சிப்பதாக அரண்மனை தேவஸ்தான

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் புறம்போக்கு நிலங்களைக் கைப்பற்ற முயற்சிப்பதாக அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தைக் கண்டித்து வணிகர் சங்கப் பேரவையினர் புதன்கிழமை கடையடைப்பு செய்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கிராமத்தில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், அரசுப் புறம்போக்கு நிலங்களை எவ்வித உரிமையும் இல்லாத அரண்மனை தேவஸ்தான நிர்வாகம் முறைகேடாகக் கைப்பற்ற முயற்சிப்பதாகவும் கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, மாரியம்மன் கோயில் கிராமத்தில் உள்ள ஏறத்தாழ 160 கடைகள் அடைக்கப்பட்டன. மேலும், அதே பகுதியில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.
வணிகர் சங்கத் தலைவர் அன்பு தலைமை வகித்தார். கிராம பொது நல கமிட்டி செயலர் சாகுல்அமீது, வணிகர் சங்கச் செயலர் லாரன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments