வாய்க்காலில் மூழ்கி இளைஞர் சாவு
தஞ்சாவூர் அருகே புதன்கிழமை வாய்க்காலில் குளிக்கச் சென்ற இளைஞர் தண்ணீர் மூழ்கி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் அருகே புதன்கிழமை வாய்க்காலில் குளிக்கச் சென்ற இளைஞர் தண்ணீர் மூழ்கி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜான் பீட்டரின் மகன் கிஷோர் பிரசாத் (18). இவர் பட்டயப்படிப்புப் படித்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் புதன்கிழமை மாலை புதுப்பட்டினம் பகுதியில் நெய்வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த இவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். நீரில் மூழ்கி இறந்த இவரது சடலம் கீழவஸ்தா சாவடி பாலம் அருகே மீட்கப்பட்டது. தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.