கும்பகோணத்தில் மாரத்தான் போட்டி
குடிநீர் ஆதாரங்களைப் பெருக்கவும், மரங்களை வளர்க்கவும், இயற்கையைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி கும்பகோணத்தில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குடிநீர் ஆதாரங்களைப் பெருக்கவும், மரங்களை வளர்க்கவும், இயற்கையைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி கும்பகோணத்தில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் மாரத்தான் கழகம் ஆண்டுதோறும் மாரத்தான் போட்டியை நடத்தி வருகிறது. இதன்படி, அந்த அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டி நகர மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி மைதானத்தை அடைந்தது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், மாவட்ட அரிமா ஆளுநர் எச். ஷேக்தாவூத் பரிசுகளை வழங்கினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.