FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பலத்த மழையால் மின்சாரம் துண்டிப்பு

பட்டுக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்ததால், பல்வேறு இடங்களில் மின்கம்பங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன; இதனால், பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கின.

Updated On : 25 மே 2018, 4:05 am IST
பகிர்:

பட்டுக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்ததால், பல்வேறு இடங்களில் மின்கம்பங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன; இதனால், பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கின.
ஒரத்தநாடு வட்டம், வாட்டாத்திக்கோட்டை காவல் சரகத்துக்குள்பட்ட நடுவிக்கோட்டை, அலிவலம், உதயசூரியபுரம், கொண்டிக்குளம் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுந்தன.
இதனால், மின்விபத்து ஏற்படாமல் இருக்க இப்பகுதிகளில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு, மின் வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் துணையுடன் மின் கம்பங்கள் மற்றும் மின் வயர்கள் மீது விழுந்த மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இரவு நேரம் வந்ததால், மரங்களை அகற்றும் பணி முழுமையாக முடியவில்லை .
இதனால் பல்வேறு கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments