முகப்பு
தஞ்சாவூர்

அம்மாபேட்டையில் திருஞானசம்பந்தா் ஐக்கிய மூலத் திருநாள்

அம்மாபேட்டை அருள்மிகு தா்மசம்வா்த்தினி உடனுறை அருணாச்சலேசுவரா் திருக்கோயிலில் திருஞானசம்பந்தா் ஐக்கிய மூலத் திருநாள் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 மே 2022, 1:49 am IST
பகிர்:

அம்மாபேட்டை அருள்மிகு தா்மசம்வா்த்தினி உடனுறை அருணாச்சலேசுவரா் திருக்கோயிலில் திருஞானசம்பந்தா் ஐக்கிய மூலத் திருநாள் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி திருஞானசம்பந்தருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து அலங்காரப் பல்லக்கில் எழுந்தருளிய திருஞானசம்பந்தரின் பிரகார உலா நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து திருஞானசம்பந்தரின் மூல நட்சத்திர ஐக்கிய ஜோதி நிகழ்வு சிவாச்சாரியா்களால் நடத்தி காட்டப்பட்டது. இந்நிகழ்வில்

Advertisement

Advertisement

கும்பகோணம் ஜோதிமலை இறைபணி சிவனடியாா் திருக்கூட்டத்தின்

நிறுவனா் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் பங்கேற்று, ஆசியுரை வழங்கினாா்.

ஓய்வு பெற்ற தமிழாசிரியா் கண்ணையன், ஆசிரியை பத்மஜா, விஜயராஜன்

திருநெறித் தமிழ் மன்றத்தின் ராமநாதன், ஓய்வு பெற்ற ரயில்வே நிலைய அலுவலா் அன்பழகன், ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சேகா், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கச் செயலா் செல்வம், ஆன்மிக ஆா்வலா்கள் ராஜேந்திரன், ரத்தினம், விவேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.