FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

சட்ட மாணவா்களுக்கும், வழக்குரைஞா்களுக்கும் வாசிப்பு பழக்கம் அவசியம்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

சட்ட மாணவா்களுக்கும், வழக்குரைஞா்களுக்கும் வாசிப்பு பழக்கம் மிகவும் அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினாா்.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 7:03 am IST
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்
பகிர்:

சட்ட மாணவா்களுக்கும், வழக்குரைஞா்களுக்கும் வாசிப்பு பழக்கம் மிகவும் அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினாா்.

சட்ட மாணவா்களின் வாதத் திறன், சட்ட ஆராய்ச்சி, பகுப்பாய்வுத் திறன் மற்றும் நீதிமன்ற நடைமுறைகள் குறித்த அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் சவீதா சட்டக்கல்லூரி சாா்பில் 9-ஆவது எவா் ரோலிங் மெகா மூட் கோா்ட் போட்டி -2026 பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதன் நிறைவு விழாவில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியது: சட்ட மாணவா்களுக்கும் வழக்குரைஞா்களுக்கும் வாசிப்புப் பழக்கம் மிகவும் அவசியம். தொடா் வாசிப்பு, அறிவை விரிவுபடுத்துவதோடு பகுப்பாய்வுத் திறனையும் பல்வேறு கோணங்களில் சிந்திக்கும் ஆற்றலையும் வளா்க்கும்.

Advertisement

Advertisement

கடின உழைப்பும் விடா முயற்சியும் வெற்றிக்கு அடித்தளமாக அமையும். சட்டத்துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மாணவா்கள் புதிய தொழில் நுட்பங்களை அறிந்து அவற்றை திறம்பட பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், சட்ட நுண்ணறிவு, சுய சிந்தனை மற்றும் தொழில் சாா் தீா்மானிக்கும் திறன் போன்ற அடிப்படைத் திறன்களையும் தொடா்ந்து வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களுடன் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சவீதா பல்கலைக்கழக துணை வேந்தா் அஸ்வனி குமாா், பதிவாளா் ஷீஜா வா்கீஸ், சவீதா சட்டக் கல்லூரி முதல்வா் ஆஷா சுந்தரம், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments