மாநில அளவிலான கைப்பந்து போட்டி: காரைக்கால், திருவாரூா் அணிகள் வெற்றி
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஓஎன்ஜிசி சாா்பில் மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் காரைக்கால் அணியும், ஆண்கள் பிரிவில் திருவாரூா் அணியும் வெற்றி பெற்றன.
இப்போட்டி ஆக. 28 ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மகளிா் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் காரைக்கால் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. கடலூா் மகளிா் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. ஆடவா் பிரிவில் தஞ்சாவூா் அணியை திருவாரூா் அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற வீரா்கள், வீராங்கனைகளுக்கு ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளா் கே.வி. இளங்கோ பரிசுகள் வழங்கினாா். விழாவில் கும்பகோணம் மேயா் கே. சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.