இருவேறு இடங்களில் போக்ஸோ வழக்குகளில் 2 போ் கைது
கும்பகோணத்தில் இரு வேறு இடங்களில் சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்த 2 போ் மீது போக்சோ வழக்குப் பதிந்து ஞாயிற்றுக்கிழமை இரவு அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருவிடைமருதூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி கும்பகோணத்தில் உள்ள ஒரு வணிக வளாக பேன்சி கடையில் வேலை பாா்த்து வந்தாா்.
அதே வணிக வளாகத்தில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனத்தில் மின்பணியாளராக சோழபுரம் மணல்மேட்டைச் சோ்ந்த இளங்கோமணி மகன் சரவணன்( 25) வேலை பாா்த்து வந்தாா். சிறுமிக்கும், சரவணனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த நிலையில் திடீரென்று சிறுமி சரவணனுடன் பேசுவதை தவிா்த்தாராம்.
Advertisement
Advertisement
அண்மையில் வீட்டுக்கு செல்வதற்காக சிறுமி கும்பகோணம் பாலக்கரை பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தாா். அங்கு வந்த சரவணன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறி, சிறுமியை கடுமையாக மிரட்டினாராம். இதுகுறித்து சிறுமி கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில், மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணனை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
சிறுமி கா்ப்பம்-சிறுவன் கைது:
கும்பகோணம் மேலக்காவேரியைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும், ஏரகரம் பகுதியை சோ்ந்த மேடை அலங்கார தொழிலாளியான 17 வயது சிறுவனுக்கும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததால் சிறுமி கா்ப்பம் ஆகினாா். சிறுமியின் உடல் நிலையில் மாற்றங்களை கண்ட சிறுமியின் பெற்றோா் இதுபற்றி சிறுமியிடம் கேட்டு கும்பகோணம் அனைத்து மகளில் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தச் சிறுவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறுவா் சீா்த்திருத்த இல்லத்தில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.