மாணவிக்கு பாலியல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது
தஞ்சாவூா் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூலித் தொழிலாளியைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூலித் தொழிலாளியைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே வல்லம் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 38 வயதான கூலித் தொழிலாளி, தனது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மகளான 11-ஆம் வகுப்பு படித்த மாணவிக்கு 2022-ஆம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை கொடுத்து வந்தாா்.
இதனால், மாணவி மனஉளைச்சலுக்கு ஆளாகிய தகவல் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு தெரிய வந்தது. இது குறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் புகாா் செய்தாா்.
Advertisement
Advertisement
இதன்பேரில், காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, தொழிலாளியை புதன்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.