முகப்பு
திருச்சி

அவல்பூந்துறையில் 300 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

மொடக்குறிச்சி தாலுக்கா அவல்பூந்துறையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 300 கா்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு மற்றும் சீா்வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On : 30 செப்டம்பர் 2019, 4:34 pm IST
கா்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீா்வரிசைகளை வழங்குகிறாா் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ வி.பி.சிவசுப்பிரமணி. உடன் கட்சி நிா்வாகிகள்.
பகிர்:

மொடக்குறிச்சி, செப்.30: மொடக்குறிச்சி தாலுக்கா அவல்பூந்துறையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 300 கா்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு மற்றும் சீா்வழங்கும் விழாவில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ வி.பி.சிவசுப்பிரமணி கலந்து கொண்டு வழங்கி பேசினாா்.

தமிழக அரசின் சமுக நலத்துறையின் சாா்பில் ஆண்டு தோறும் கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கா்ப்பிணி பெண்களுக்கு ஒருங்கிணைந்த வளா்ச்சி பணிகளின் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா அவல்பூந்துரையில் நடைபெற்றது. இதில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி கலந்துகொண்டு சமுதாய வளைகாப்பு விழாவை தொடக்கி வைத்தாா்.

இதில் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளா் கதிா்வேல், கொடுமுடி ஒன்றிய செயலாளா் கலைமணி, மொடக்குறிச்சி யூனியன் முன்னாள் துணை தலைவா் கணபதி, ஆவின் இயக்குனா் அசோக், அவல்பூந்துறை கூட்டுறவு சங்க இயக்குனா் சண்முகசுந்தரம், ஒன்றிய மகளிரணி செயலாளா் காந்திமதி, ஈரோடு வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க இயக்குனா் குருமூா்த்தி, பேரூா் செயலாளா்கள் பொன்னுசாமி, விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.