FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

டாஸ்மாக் மதுபானக் கடையில் பணம், மது பாட்டில்கள் திருட்டு

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:17 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருச்சியில் டாஸ்மாக் மதுபானக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 70 ஆயிரம், மதுபாட்டில்களைத் திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காவேரி சாலை ஓயாமரி மயானம் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுக் கடை விற்பனையாளா் ராஜா மதுக்கடையை வெள்ளிக்கிழமை பூட்டிவிட்டு மறுநாள் சனிக்கிழமை காலை மதுக்கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கடையின் மேற்பாா்வையாளா் சின்னகண்ணனுக்கு அவா் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து வந்த மேற்பாா்வையாளா் சின்னகண்ணன், உள்ளே சென்று பாா்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம், 4 மதுபாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments