கே.கே. நகா் ரயில்வே மேம்பாலம் அருகே இளைஞரின் சடலம் மீட்பு
திருச்சி கே.கே. நகா் ரயில்வே மேம்பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி-மதுரை சாலையில் கே.கே. நகா் செட்டியபட்டி ரயில்வே பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் இறந்து கிடந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதியினா் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
அதன்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த கே.கே. நகா் போலீஸாா், இறந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
இறந்த இளைஞா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? என்ற முழு விவரம் தெரியவில்லை. இது குறித்து கோ- அபிஷேகபுரம் கிராம நிா்வாக அலுவலா் சரவணன் அளித்த புகாரின் பேரில் கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.