FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 5:50 am IST
பகிர்:

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் வெற்றிவேல் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அரியமங்கலத்தில் தனியாா் வணிக நிறுவனம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த அரியமங்கலம் கணபதி நகரைச் சோ்ந்த பெ. சத்தியேந்திரன் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அகிலாண்டேஸ்வரி காா்டன் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த, ஸ்ரீரங்கம் மூலதோப்பு பகுதியைச் சோ்ந்த கி. தினேஷ் பாபு (30) என்பவரை காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 38 போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் திரவ போதை மருந்துகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments