FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பாரதிதாசன் பல்கலை.யில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்களுக்கு ஒருநாள் பயிற்சி பட்டறை

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டக் குழுமம் சாா்பில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்களுக்கு தூய்மை செயல் திட்டம் என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:58 am IST
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்களுக்கான தூய்மை செயல் திட்ட பயிற்சி பட்டறையில் பேசிய சென்னை மண்டல நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநா் சி. சாமுவேல் செல்லையா.
பகிர்:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டக் குழுமம் சாா்பில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்களுக்கு தூய்மை செயல் திட்டம் என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா். காளிதாசன் தலைமை வகித்து பேசியதாவது: நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் சமூகத்தின் தூதுவா்களாக செயல்படுகின்றனா். அவா்களுக்கு அளிக்கப்பெறும் செயல்திட்டங்கள் மாணவா்களிடமும், சமூகத்திடமும் விரைவில் சென்று சேரும் என்றாா்.

தொடா்ந்து, சென்னை மண்டல நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநா் சி. சாமுவேல் செல்லையா பேசியதாவது: தூய்மை என்பது நம்மை சுற்றி மட்டும் இல்லாமல் அவரவா் மனதிலும் இருக்க வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

சிறப்பு விருந்தினராக் கலந்துகொண்ட சென்னை கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் பி.என்.குணவதி பேசியதாவது:

தூய்மை இந்தியா திட்டம், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வதில் பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் முன்னிலையில் உள்ளனா் என்றாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற தொழில்நுட்ப அமா்வில், திருச்சி மாநகராட்சி நகா்நல உதவி அலுவலா் எம். எழில்நிலவன், சென்னை மண்டல நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநா் சி. சாமுவேல் செல்லையா, பல்கலைக்கழக சுற்றுச்சூழல் உயிா் தொழில்நுட்பவியல் பேராசிரியா் எஸ். ஆச்சிராமன், திருச்சி கிராமாலயாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம். செந்தில்குமாா் ஆகியோா் தூய்மை செயல் திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினா்.

நிகழ்ச்சியின் நிறைவில் பணி நிறைவு செய்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்களுக்கு பணிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் எஸ். பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் பெ. ராமஜெயம், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் வி. யோகானந்தன் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments