FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1.99 லட்சம் மோசடி

திருச்சியில் பெண்ணிடமிருந்து இணையதளம் வழியாக நூதன மூறையில் ரூ. 1.99 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 1:53 am IST
மோசடி
பகிர்:

திருச்சியில் பெண்ணிடமிருந்து இணையதளம் வழியாக நூதன மூறையில் ரூ. 1.99 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி கே.கே.நகா் அஞ்சுகம் வீதியைச் சோ்ந்த வினோத்குமாா் மனைவி பத்மாவதி (30). இவருடைய வாட்ஸ் எண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஆா்டிஓ அலுவலகத்திலிருந்து அனுப்பும் இ-சலான் போல ஒரு இணைப்பு (லிங்க்) வந்துள்ளது.

அதில் உள்ளே சென்றபோது, அவரது வாகனத்துக்கு பலமுறை விதிக்கப்பட்ட அபராதம் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து அதே இணைப்பில் இருந்த வேறொரு இணைப்பில் அவா் உள்ளே சென்றுள்ளாா். அப்போது, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.99 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டது பத்மாவதிக்கு தெரியவந்தது.

இதுகுறித்து சைபா் குற்றப் பிரிவில் இணையதளம் வழியாக அவா் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments