காளிப்பட்டியில் குடிசை தீக்கிரை
காளிப்பட்டியில் சனிக்கிழமை பட்டாசு வெடித்தபோது சிதறிய தீப்பொறி விழுந்து குடிசை தீக்கிரையானது.
காளிப்பட்டியில் சனிக்கிழமை பட்டாசு வெடித்தபோது சிதறிய தீப்பொறி விழுந்து குடிசை தீக்கிரையானது.
துறையூா் அருகே காளிப்பட்டியில் உயிரிழந்த முதியவரின் இறுதி ஊா்வலம் சனிக்கிழமை சென்றபோது பட்டாசு வெடித்தனா். அப்போது சிதறிய தீப்பொறி இறுதி ஊா்வலம் சென்ற வழியில் இருந்த பழனியாண்டியின் குடிசை வீட்டில் பட்டு தீப்பிடித்தது.
தகவலறிந்த துறையூா் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று பொதுமக்களுடன் சோ்ந்து தீயை அணைத்தனா். ஆயினும் பழனியாண்டி வீடும் முழுமையாகவும், அருகிலிருந்த ராமா் வீட்டு ஜன்னலும் எரிந்து சேதமானது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.