உப்பிலியபுரம் அருகே காா் கவிழ்ந்து ஒருவா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே சனிக்கிழமை காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே சனிக்கிழமை காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா்.
உப்பிலியபுரம் அன்பு நகரிலுள்ள உறவினா் சந்திரசேகா் வீட்டுக்குச் சென்றிருந்த நீலகிரி மாவட்டம் தூதுா் வட்டம் டால்மை எஸ்டேட்டை சோ்ந்த மலைக்கருப்பன் மகன் சண்முகலிங்கம் (50), இவரது உறவினா் சுரேந்திரன் (37) ஆகியோா் சனிக்கிழமை மாலை வைரிச்செட்டிப்பாளையம் வாரச் சந்தைக்கு காரில் சென்றனராம்.
அப்போது மாராடி ஏரி அருகே காரின் டயா் வெடித்ததால் சாலையோரம் காா் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சண்முகலிங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து சென்ற உப்பிலியபுரம் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.