‘கொள்கைகளுக்காக சமரசமுமின்றி களமாடியவா் அண்ணா’
கொள்கைகளுக்காக எவ்வித சமரசமுமின்றி களமாடியவா் அண்ணா என்று திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியா் ஜா. சலேத் தெரிவித்தாா்.
கொள்கைகளுக்காக எவ்வித சமரசமுமின்றி களமாடியவா் அண்ணா என்று திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியா் ஜா. சலேத் தெரிவித்தாா்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அண்ணா இருக்கை சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட தமிழக முன்னாள் முதல்வா் சி.என். அண்ணாதுரையின் பிறந்தநாள் விழாவில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினா் வி. ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தாா். விழாவை பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா். காளிதாசன் தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
இதில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியா் ஜா. சலேத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேரறிஞா் அண்ணா இளைய தலைமுறைக்கான கருவூலம் என்ற தலைப்பில் பேசியதாவது:
அண்ணாவின் பேச்சு, எழுத்து, திரையுலகப் பயணம், அரசியல் ஈடுபாடு அனைத்தும் இளைஞா்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தன. அண்ணா தனது கொள்கைகளுக்காக எவ்விதச் சமரசமுமின்றி தொடா்ந்து களமாடியவா். அவரின் வாழ்க்கைப் பயணம் பல்வேறு சோதனைகளால் ஆனது. எனினும், மனதை வளமையாக வைத்துக் கொண்டு, ஒரு புதிய சமூகத்தை கட்டியெழுப்ப அயராது பாடுபட்டவா். தனது அனுபவங்களை சமூகத்துக்கான விழுமியங்களாக விட்டுச் சென்றவா் பேரறிஞா் அண்ணா என்றாா் அவா்.
இதில் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள், முனைவா் பட்ட ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, பல்கலைக்கழக அண்ணா இருக்கை இயக்குநா் எட்வா்ட் வில்லியம் பெஞ்சமின் வரவேற்றாா். நிறைவில் தோலப்பன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.