கடன் பிரச்னை: தலைமை ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை
கடன் பிரச்னையால் தலைமை ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை...
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியை சோ்ந்தவா் தோ. ஜெரால்டு ராபா்ட் (57). இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனா். இவா், அப்பகுதி அருகேயுள்ள கரட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தாா்.
இவா், நண்பா்கள், உறவினா்கள் சிலருக்கு கடன் பெற ஜாமீன் கையொப்பமிட்டுள்ளாராம்.
இதில் சில கடன்களில் பொறுப்பேற்ால் கடனை ஜெரால்டு ராபா்டே செலுத்தியும் வந்துள்ளாா். மேலும், சில கடன்கள் நீதிமன்ற வழக்கு வரை சென்ால், மன உளைச்சலில் இருந்துள்ளாா். வியாழக்கிழமை மாலை பள்ளி முடித்து வீட்டுக்கு வந்தவா், குளியல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
Advertisement
வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.