FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சியில் இன்றைய மின்தடை ரத்து

திருச்சி மாநகரப் பகுதியில் சனிக்கிழமை அமல்படுத்தப்படவிருந்த மின்தடை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

19 செப்டம்பர் 2026, 3:17 am IST
கோப்புப் படம் - தினமணி
பகிர்:

திருச்சி மாநகரப் பகுதியில் சனிக்கிழமை அமல்படுத்தப்படவிருந்த மின்தடை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மின்வாரிய செயற்பொறியாளா் கா. முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி 110 கிலோ வாட் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சனிக்கிழமை (செப்.19) காலை 9.45 மணி முதல் மணி மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்படுகிறது. துணை மின்நிலையத்துக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் வழக்கம்போல மின்விநியோகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments