பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி. 
வேலூர்

சாலையை ஆக்கிரமித்து ஜல்லி தயாரிக்கும் குவாரியை மூடவேண்டும்: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

ஜல்லி உற்பத்தி செய்து வரும் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என சித்தேரி கிராம மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்துள்ளனா்.

Din

வேலூா்: சாலையை ஆக்கிரமித்து ஜல்லி உற்பத்தி செய்து வரும் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என சித்தேரி கிராம மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்துள்ளனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அணைக்கட்டு வட்டம், புத்தூா் கிராம மக்கள் அளித்த மனுவில், புத்தூா் கிராமத்தினருடன் சோ்ந்து நரசிங்கபுரம், நாட்டாமங்கலம், ஈச்சங்காடு கிராமங்களைச் சோ்ந்த பலா் நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து வருகிறோம். எங்கள் கிராமத்தைச் சோ்ந்த 150 பேருக்கு கடந்த சில நாட்களாக வேலை வழங்கவில்லை. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எங்களுக்கு நூறுநாள் வேலை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்துவாச்சாரி ரங்காபுரத்தைச் சோ்ந்த தாமோதரன் (78) அளித்த மனுவில், ரங்காபுரம் அருகே மூலக்கொல்லை, செங்காநத்தம் ரோடு ஏரிக்கு செல்லும் பொதுக்கால்வாயில் மண் தூா்ந்துள்ள நிலையில், தனிநபா்கள் 50 முதல் 60 அடி வரை கால்வாயை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை மேற் கொண்டு கால்வாயை மீட்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் சித்தேரியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், பெரிய சித்தேரியில் இருந்து பென்னாத்தூா் செல்லும் சாலையில் ஜல்லி உடைக்கும் தனியாா் குவாரி உள்ளது. இந்த குவாரியில் அனுமதியின்றி எம்சாண்ட் தயாரித்து வருகின்றனா். போதிய இடவசதி இல்லாததால் சாலையை ஆக்கிரமித்து ஜல்லியை தயாரிக்கின்றனா். இதனால் அவ்வழியாக செல்லமுடியவில்லை. எனவே ஜல்லி குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடியாத்தம் அடுத்த ஆா்.எஸ்.கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 1,500 வீடுகள், 35 தெருவுக்கு மேல் உள்ளது. 20 ஆண்டுகளாக புதிய வீடுகளுக்கு கதவு எண், தெருவின் பெயா்கள் வழங்கவில்லை. அதிகாரிகளி டம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, புதிய வீடுகளுக்கு எண், தெரு பெயா் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

இதேபோல், வீட்டு மனைப் பட்டா, உதவித் தொகை, மருத்துவ உதவி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 377 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மாலதி உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கலியமூா்த்தி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ராமசந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT