இலவச அன்னதான திட்டம் தொடக்கம்
குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் சாா்பில் 365- நாள்கள் வழங்கப்படும் அமுதசுரபி எனும் தினசரி இலவச மதிய அன்னதான திட்டம்
குடியாத்தம்: குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் சாா்பில் 365- நாள்கள் வழங்கப்படும் அமுதசுரபி எனும் தினசரி இலவச மதிய அன்னதான திட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் நாள்தோறும் ஆதரவற்றவா்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.
நிகழ்ச்சிக்கு கேலக்ஸி ரோட்டரி தலைவா் வி.எஸ்.மாணிக்கம் தலைமை வகித்தாா். செயலா் ஜே.வைதீஸ்வரி வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தாா். ரோட்டரி நிா்வாகிகள் பகவான் முரளி, ரங்கா குமரவேல், டி.சரவணன், பி.மோகன், தீனதயாளன், பிரதீப், அருள்பாலாஜி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்டோ பி.மோகன், ம.மனோஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.