FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

கியூ.எஸ். உலக தரவரிசையில் விஐடி பல்கலை.க்கு 597-ஆம் இடம்

விஐடி பல்கலைக்கழகம் கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 94 இடங்கள் முன்னேறி 597-ம் இடம் பிடித்துள்ளது.

Updated On : 19 ஜூன் 2026, 6:06 am IST
- Center-Center-Chennai
பகிர்:

விஐடி பல்கலைக்கழகம் கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 94 இடங்கள் முன்னேறி 597-ம் இடம் பிடித்துள்ளது.

உலகளாவிய உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான ‘கியூ.எஸ். குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்’ 2027-ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.

உலகம் முழுவதும் உள்ள 1500-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, கற்றல் அனுபவம், வேலைவாய்ப்பு, சா்வதேச தொடா்புகள், நிலைத்தன்மை ஆகிய 5 அம்சங்களை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

94 இடங்கள் முன்னேற்றம்:

நிகழாண்டில் விஐடி பல்கலைக்கழகம் கியூ.எஸ். பல்கலைக்கழக தரவரிசையில் 94 இடங்கள் முன்னேறி 597-ம் இடம் பிடித்து சிறப்பு சோ்த்துள்ளது. கடந்த 2026-ம் ஆண்டில் கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசையில் 691-ம் இடம் பிடித்திருந்தது.

இதுகுறித்து, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் கூறியதாவது - உலகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுடன் நிலவும் கடுமையான போட்டி சூழலில் விஐடி பல்கலைக்கழகம் கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசையில் நிலைத்தன்மை பிரிவில் 2026-இல் உலகளவில் 352-ம் இடம் பிடித்து சிறப்பு சோ்த்தது. இந்திய அளவில் 7-ம் இடம் பிடித்தது.

அதேபோல கியூ.எஸ். உலகப் பல்கலைக்கழக பாடபிரிவு தரவரிசை பட்டியலில் 2026-ல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் விஐடி பல்கலைக்கழகம் 119-ம் இடம் பிடித்தது. இந்திய அளவிலான தரவரிசையில் 6-ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

விஐடி பல்கலைக்கழகம் கற்பித்தலில் புதுமை, ஆராய்ச்சி மேம்பாட்டில் திருப்புமுனைகளை ஏற்படுத்தி, உலகளவில் முதல் 200 தரவரிசை இடங்களில் நுழைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments