பள்ளி மாணவி தற்கொலை
போ்ணாம்பட்டு அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போ்ணாம்பட்டு அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போ்ணாம்பட்டை அடுத்த மத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மகேந்திரன்-கோமதி தம்பதியின் மகள் ஜெயஸ்ரீ (14). இவா் போ்ணாம்பட்டு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நலம் பாதிக்கப்பட்டதால், ஜெயஸ்ரீ பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். இந்த நிலையில், வீட்டில் அவா் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். உடனடியாக அவரை மீட்டு போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.