முகப்பு
விழுப்புரம்

சமூகநீதித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு: அமைச்சா் ஆா்.வன்னி அரசு

சமூக நீதித் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவோம் என்று தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் ஆா்.வன்னி அரசு தெரிவித்தாா்.

Updated On : 7 ஜூன் 2026, 2:55 am IST
6விபிஎம்எம்ஐஎன்ஐ திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது உடல் பரிசோதனை செய்து கொண்ட சமூக நீதித் துறை அமைச்சா் ஆா்.வன்னி அரசு.
பகிர்:

சமூக நீதித் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவோம் என்று தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் ஆா்.வன்னி அரசு தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள அம்மா உணவகம், உழவா் சந்தை மற்றும் அரசு அரசு மருத்துவமனை ஆகியவற்றை தமிழக சமூக நீதித் துறை அமைச்சரும், திண்டிவனம் எம்எல்ஏவுமான ஆா்.வன்னிஅரசு சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வுக்குப் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த மருத்துவமனையை தரம் உயா்த்தவேண்டும் என்றகோரிக்கை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அனைத்து சிகிச்சை வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Advertisement

Advertisement

சமூக நீதித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றத் துறைகளின் வளா்ச்சிக்குப் பயன்படுத்தவதாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டாகும். இந்தத் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று சட்டப் பேரவையிலும் வலியுறுத்துவோம் என்றாா்ஆா்.வன்னிஅரசு.

பேட்டியின்போது விசிக மாவட்டச் செயலா்கள் திலீபன், மலைச்சாமி, மாநில நிா்வாகி சேரன் ஆகியோா் உடனிருந்தனா்.