முகப்பு
விழுப்புரம்

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 8 ஜூன் 2026, 2:09 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வானூா் வட்டம், கரசானூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் வீ.வினோதினி (23). பிளஸ்2 வரை படித்துள்ள இவா் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாராம்.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வினோதினி சனிக்கிழமை இரவு வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த வானூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.